மாமண்டூரில் தே.மு.தி.க. கூட்டணி மாநாடு 6 தலைவர்கள், இன்று ஒரே மேடையில் பிரசாரம்
சென்னை:
தே.மு.தி.க.– மக்கள் நலக் கூட்டணியில் தற்போது த.மா.கா. இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் தே.மு.தி.க. 104 தொகுதியிலும், ம.தி.மு.க. 29 தொகுதியிலும், த.மா.கா. 26 தொகுதியிலும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 25 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் இன்று மாலை காஞ்சீபுரம் மாவட்ட மதுராந்தகம் அருகேயுள்ள மாமண்டூரில் தே.மு.தி.க. கூட்டணி மாநாடு நடக்கிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தே.மு.தி.க. கூட்டணியில் உள்ள 6 கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் இன்று காலை முதலே வரத் தொடங்கினர். மாநாட்டுக்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட் டுள்ளது.
இந்த மாநாட்டில் தே.மு. தி.க. தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் ஆகிய 6 தலைவர்களும் ஒரே மேடையில் பிரசாரம் செய்கிறார்கள்.
இந்த மாநாட்டில் தே.மு.தி.க.வினர் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.