கதம்பம்
மௌனம்

உனக்கு என்ன வேணும்?

Published On 2022-05-21 11:22 GMT   |   Update On 2022-05-21 11:22 GMT
ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசணும்னா... அதுக்கு மொழி தான் தொடர்பு சாதனம். ஒரு மனிதன் கடவுளோடு தொடர்பு கொள்ள அதுக்கு மௌனம் தான் தொடர்பு சாதனம்.
ஒரு ஆசிரமம்... அங்கே ஒரு குருநாதர் இருந்தார். அவரை தேடிகிட்டு போனான் ஒருத்தன்.

குருநாதர் அவனை நிமிர்ந்து பார்த்தார். உனக்கு என்ன வேணும்? ன்னு கேட்டார்.

ஐயா நான் கடவுளை பார்க்கணும் என்று சொன்னான்.

அதுக்கு ஏன் என்னை தேடிகிட்டு வந்தாய்? என்று கேட்டார்.

விவரம் தெரிஞ்சுகிட்டு போகலாம் என்று வந்தேன், கடவுளை எப்படி பார்க்கிறது.. எப்படி அவரோட பேசறது? எந்த மொழியில பேசணும்? இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு போகலாம் என்று வந்தேன்.. என்று சொன்னான்.

சரி புறப்படு! என்றார்.

எங்கே? ன்னான்

இங்கே இருக்கிற சீடர்கள் சில பேரை பார்த்துட்டு வரலாம்.. வா, அப்படின்னு சொல்லி அவனை அழைச்சிட்டு புறப்பட்டார்.

இவன் அவர் பின்னாடியே போனான். அங்கே ஒரு மரத்தடியில் இரண்டு சீடர்கள் உக்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்க..

அவங்களை சுட்டிக்காட்டி ,“ அதோ பார் அவங்க என்ன செஞ்சுகிட்டுருக்காங்க?” என்று கேட்டார்.

ஒருத்தன் இன்னொருவன் கிட்ட பேசிக்கிட்டு இருக்கான்! என்றான்.

அடுத்த படியா இன்னொரு மரத்தடியில் ஒரு சீடன், தனியா உக்கார்ந்து இருக்கான்..

அவனை சுட்டிக்காட்டி ,“ அதோ பார் அவன் என்ன செஞ்சிகிட்டு இருக்கான்? என்று கேட்டார்..

அவன்  சும்மா தான் இருக்கான் - அப்படின்னான்..

குருநாதர் சிரிச்சிக்கிட்டே விளக்கம் கொடுத்தார்..

“முதல் மரத்தடியிலே பாத்தியே .. அங்கே ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசி கொண்டிருந்தான்..

இரண்டாவது ஒரு மரத்தடியிலே பாத்தியே அங்கே ஒரு மனிதன் கடவுளோடு பேசி கொண்டிருக்கிறான்” என்றார்..

இதை கேட்டதும் இவன் இன்னும் குழம்பி போயிட்டான்..

என்ன சொல்றிங்க? ன்னான்

அவர் சொன்னார்:-

“இதோ பாருப்பா.. ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசணும்னா... அதுக்கு மொழி தான் தொடர்பு சாதனம். ஒரு மனிதன் கடவுளோடு தொடர்பு கொள்ள அதுக்கு மௌனம் தான் தொடர்பு சாதனம்.

அதனாலே நீ கடவுளோட தொடர்பு கொள்ள விரும்பினால் மௌனமாக இரு .. மனிதனோட தொடர்பு கொள்ள விரும்பினால் நீ பேசு! என்றார் .

வந்தவன் யோசிக்க ஆரம்பிச்சான்.. கடவுளோடு எந்த மொழியிலே பேசணும்ங்கறதையும் புரிஞ்சுகிட்டான் . அந்த கடவுள் தனக்குள்ளே இருக்கிற ஓர் உண்மை- அப்படிங்கிறதையும் புரிஞ்சுகிட்டான் .

மகான்கள் என்ன சொல்றாங்க தெரியுமா? உண்மையான வெறுமை தன்மை தான் கடவுள். அந்த கடவுளோடு பேச விரும்புகிறவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மொழி மௌனம்.

-வள்ளல் ராமமூர்த்தி
Tags:    

Similar News

தம்பிடி