கதம்பம்
நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்துவிட வேண்டும். மறுநாள் காலை அமிர்தபானம் தயார்! சோத்துப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்.
“ஆற்றுநீர் வாதம் போக்கும்;
அருவி நீர் பித்தம் போக்கும்;
சோற்று நீர் இரண்டையும் போக்கும்”
மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக விளங்குவது வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும். இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும் நோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது.
ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப்பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும். மூலிகைகளின் மீது பட்டு இந்நீர் வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது.
வாதநோய் தொடர்பாக நரம்புக்கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக கண் மற்றும் மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன. இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவிநீரும் பயன்படுகின்றன.
ஆனால் வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது. அதாவது கஞ்சிதண்ணிக்கு அந்த மருத்துவ குணம் உள்ளது. இத்தகைய மருத்துவ குணம் கருதியே நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் பழைய சோற்று நீரை அருந்துகின்றனர்.
கஞ்சி குடிப்பதால்..
1. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
2 .ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
3. உடல் சோர்வை போக்குகிறது.
4. உடலில் உள்ள செல் சிதைவுகளை தடுக்கிறது.
5 .உடல் சூட்டை தணிக்கிறது.
6. வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.
7. உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
8. வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும் சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோற்று கஞ்சி.
ஆனால் நாம் தான் இதை தின்றால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு “பழையதை” பழித்து வருகிறோம். அது பெரிய தவறு!
நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்துவிட வேண்டும். மறுநாள் காலை அமிர்தபானம் தயார்! சோத்துப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்.
அருவி நீர் பித்தம் போக்கும்;
சோற்று நீர் இரண்டையும் போக்கும்”
மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக விளங்குவது வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும். இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும் நோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது.
ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப்பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும். மூலிகைகளின் மீது பட்டு இந்நீர் வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது.
வாதநோய் தொடர்பாக நரம்புக்கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக கண் மற்றும் மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன. இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவிநீரும் பயன்படுகின்றன.
ஆனால் வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது. அதாவது கஞ்சிதண்ணிக்கு அந்த மருத்துவ குணம் உள்ளது. இத்தகைய மருத்துவ குணம் கருதியே நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் பழைய சோற்று நீரை அருந்துகின்றனர்.
கஞ்சி குடிப்பதால்..
1. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
2 .ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
3. உடல் சோர்வை போக்குகிறது.
4. உடலில் உள்ள செல் சிதைவுகளை தடுக்கிறது.
5 .உடல் சூட்டை தணிக்கிறது.
6. வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.
7. உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
8. வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும் சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோற்று கஞ்சி.
ஆனால் நாம் தான் இதை தின்றால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு “பழையதை” பழித்து வருகிறோம். அது பெரிய தவறு!
நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்துவிட வேண்டும். மறுநாள் காலை அமிர்தபானம் தயார்! சோத்துப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்.