கதம்பம்
கூந்தல் அழகுக்கு இயற்கை ஷாம்பு...
முடியின் உறுதித்தன்மையும் நீளமும் அதிகரிக்க இயற்கை முறையில் ஷாம்புவை பயன்படுத்தினால் போதுமானது.
“நான் சொல்லுவது எல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை”
கடந்த வருடத்திற்கு முந்தைய வருடம்....ஷாம்புவை தவிர்க்க வேண்டும் என்று நினைத்தேன். உறுதி மொழியெல்லாம் எடுக்கவில்லை... நினைத்தேன் அவ்வளவுதான். ஆனால் இன்று வரை அதை கடைபிடித்து வருகிறேன். ஷாம்புவை மறந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன.
முந்தைய நாள் இரவில் மறக்காமல் கொஞ்சம் வெந்தயம், பச்சை பருப்பு, கடலை, வால்நட்/பாதம் (கைவசம் இருந்தால்) ஊறவைத்து விடுவேன்.
காலையில், செம்பருத்தி, மருதாணி (எப்போதாவது மட்டும்), கீழாநெல்லி+கருவேப்பிலை (எப்போதும்), நெல்லிக்காய், சிறிது தேங்காய், முட்டை வெண்கரு, வெங்காயம், கரிசாலை.... இப்படி எது கைவசம் இருக்கிறதோ, அவற்றையும் சேர்த்து அரைத்து விடுவேன். குறைந்தபட்சம் 5 பொருட்களாக இருக்க வேண்டும்.
வடிகட்டியும், அப்படியேவும் தலையில் தேய்த்து, அலசி விடவும். அவ்வளவே. முடியின் உறுதித் தன்மையும் நீளமும் சற்றே கூடியது போல் இருக்கிறது.
தலை குளிக்க வேண்டுமென்றால் இப்போது குழந்தைகளே “ஒண்ணு பச்ச கலர்ல செய்து தேய்ப்பியே....அது செய்து குடும்மா” என்று கேட்கிறார்கள்.
எந்த ஷாம்பு எடுத்துக் கொண்டாலும், அதிலிருக்கக் கூடிய சத்துக்கள் அனைத்தும் இதில் இருக்கிறது. ஆனால் தேவையற்ற வேதிப்பொருட்கள் இல்லை. இது கூடுதல் ஆரோக்கியமும் கூட.
கடந்த வருடத்திற்கு முந்தைய வருடம்....ஷாம்புவை தவிர்க்க வேண்டும் என்று நினைத்தேன். உறுதி மொழியெல்லாம் எடுக்கவில்லை... நினைத்தேன் அவ்வளவுதான். ஆனால் இன்று வரை அதை கடைபிடித்து வருகிறேன். ஷாம்புவை மறந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன.
முந்தைய நாள் இரவில் மறக்காமல் கொஞ்சம் வெந்தயம், பச்சை பருப்பு, கடலை, வால்நட்/பாதம் (கைவசம் இருந்தால்) ஊறவைத்து விடுவேன்.
காலையில், செம்பருத்தி, மருதாணி (எப்போதாவது மட்டும்), கீழாநெல்லி+கருவேப்பிலை (எப்போதும்), நெல்லிக்காய், சிறிது தேங்காய், முட்டை வெண்கரு, வெங்காயம், கரிசாலை.... இப்படி எது கைவசம் இருக்கிறதோ, அவற்றையும் சேர்த்து அரைத்து விடுவேன். குறைந்தபட்சம் 5 பொருட்களாக இருக்க வேண்டும்.
வடிகட்டியும், அப்படியேவும் தலையில் தேய்த்து, அலசி விடவும். அவ்வளவே. முடியின் உறுதித் தன்மையும் நீளமும் சற்றே கூடியது போல் இருக்கிறது.
தலை குளிக்க வேண்டுமென்றால் இப்போது குழந்தைகளே “ஒண்ணு பச்ச கலர்ல செய்து தேய்ப்பியே....அது செய்து குடும்மா” என்று கேட்கிறார்கள்.
எந்த ஷாம்பு எடுத்துக் கொண்டாலும், அதிலிருக்கக் கூடிய சத்துக்கள் அனைத்தும் இதில் இருக்கிறது. ஆனால் தேவையற்ற வேதிப்பொருட்கள் இல்லை. இது கூடுதல் ஆரோக்கியமும் கூட.
-வண்டார்குழலி