கதம்பம்
காதலர்கள்

காதலர் தினம் உருவானது எப்படி?

Published On 2022-02-14 14:01 IST   |   Update On 2022-02-14 14:01:00 IST
உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படும் காதலர் தினம் உருவானது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்...
கி.பி.269-களில் ரோமை ஆண்ட கிளாடியஸ் என்ற மன்னன், ஆண்கள் (வாலிபர்கள்) திருமணமே செய்யக் கூடாது. திருமணம் செய்தால் வலிமை போய்விடும். அவர்கள்  போர்த்தொழில் செய்ய முடியாது. ஆகவே வயது வந்த ஆண்கள் திருமணம் செய்யக் கூடாது.

அதுமட்டுமல்ல,  நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கும் தடைச்சட்டம் கொண்டு வந்தான்.

காதலித்துக் கொண்டிருந்த காதலர்களுக்கு இது அதிர்ச்சியாகி விட்டது. இந்நிலையில் அந்த நாட்டு மதகுருக்களில் ஒருவரான புனித வேலன்டைன் நாடு முழுதும் உள்ள  காதலர்களை அழைத்து வந்து, தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்துவைத்தார்.

இதையறிந்த மன்னன் கிளாடியஸ் , மதகுரு வேலன்டைனை கொடுமை செய்து, சிறையில் அடைக்கிறான். அவர் இருந்த சிறை அதிகாரி மகள்  அஸ்டோரியஸ், வேலன்டைனை  நேசித்து வந்தாள். இதையறிந்த சிறை அதிகாரி மகளை வீட்டுச் சிறையில் வைக்கிறான் மன்னன்.

காதலரை சேர்த்து வைத்த ராஜகுற்றத்திற்காக  கி.பி.270 பிப்ரவரி 14ல்  வேலன்டைன், கல்லால் அடித்து, தலை துண்டிக்கப்பட்டு, கொல்லப்படுகிறார்.

அதற்கு  முன்,  தன் காதலி  அஸ்டோரியஸுக்கு ஒரு வாழ்த்து மடல் தயாரித்து,  “விடை பெறுகிறேன்...உன் வேலன்டைன்” என்று எழுதி வைத்துவிட்டு, தண்டனையை ஏற்கிறார்.

காதலரை சேர்த்து வைத்த காரணத்தால் கொல்லப்பட்டதால் அவருடைய தினத்தை “வேலன்டைன்ஸ் டே”  என உலகக் காதலர்கள் கொண்டாடுகின்றனர். இது காதலர் தினமாக மாறிவிட்டது.

-ஜெயதேவன்

Similar News