கதம்பம்
புற்றுநோய்

புற்றுநோயை தடுக்கும் வழிமுறைகள்...

Published On 2022-02-04 16:26 IST   |   Update On 2022-02-04 16:26:00 IST
எந்த வயதினராக இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவில் சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். இதனால், ஊட்டச்சத்துக் குறைபாடும் இல்லாமல், நல்ல நோய் எதிர்ப்புச் சக்தியும் கிடைக்கும்.
உலகளவில் இறப்பிற்கு இரண்டாவது பெரிய காரணமாக புற்றுநோய் இருக்கிறது. புற்றுநோய் என்பது கட்டுப்பாடற்று செல்கள் பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும்.

இந்த செல்கள் பிரிந்து பரவி ஏனைய செல்களையும், உறுப்புகளையும் தாக்குகின்றன. ஆரம்ப நிலையில் கண்டறியப்படும், புற்றுநோயை முழுவதும் குணப்படுத்தக் கூடிய நவீன மருத்துவ வசதிகள் தற்போது வந்துள்ளன.  

முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுசெல்கள் ரத்தத்தின் வழியாக பரவுகின்றன. புற்றுநோய் எந்த வயதினரையும் தாக்கும். எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

சரியான விழிப்புணர்வு மற்றும் தெளிவான திட்டமிடல் இருந்தால் புற்றுநோயிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

புற்றுநோய்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவை சாதாரண நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்படக் கூடியவையாகவே உள்ளன.
 
எந்த வயதினராக இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவில் சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். இதனால், ஊட்டச்சத்துக் குறைபாடும் இல்லாமல், நல்ல நோய் எதிர்ப்புச் சக்தியும் கிடைக்கும்.

புகைபிடிப்பதை, மதுப்பழக்கம், போதைப் பொருட்கள், நிச்சயம் 60% வரை புற்று நோய்களைத் தவிர்க்கும். கொழுப்பு அதிகமுள்ள அசைவ உணவுகளை தவிர்த்து, மருந்துகளும், வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுத்தப்படாத மாமிச உணவுகள், அந்தந்த இடத்தில் கிடைக்கும் சிறு மீன்கள் போன்றவற்றை உண்ணலாம்.

ஆரோக்கியமான உணவு, சரியான உணவு நேரம், முறையான நோய்க்கட்டுப்பாடு, தினமும் உடற்பயிற்சி போன்றவை, அனைத்து உடல் உறுப்புகளின் இயக்கங்களையும் சீராக வைத்து இருப்பதுடன், இரத்த ஓட்டமும் சரியாக இருந்து, உடல் நோய்களை எதிர்த்து போராடும் தன்மை பெறும்.

முழு தானியங்கள், கீரைகள், நாட்டுக் காய்கள், பழங்கள் போன்ற உணவுகளில் நார்ச்சத்துகள், ஆன்டி ஆக்ஸிடன்கள், உயிர் சத்துக்கள் போன்ற, புற்றுநோயை எதிர்க்க கூடிய தன்மையுள்ள பொருட்கள் அடங்கியுள்ளன. அவற்றை தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.

அதிக பக்குவப்படுத்துதலுக்கு உள்ளான, அலுமினியம் பாக்கெட்டில், பாட்டிலில், பிளாஸ்டிக் உறைகளில் அடைக்கப்பட்ட.... நிறமூட்டிகள், சுவையூட்டிகள், மணமூட்டிகள், பிற ரசாயனப் பொருட்கள் சேர்த்து பக்குவப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை அறவே தவிர்க்கவேண்டும்.

-வண்டார் குழலி ராஜசேகர்

Similar News