செய்திகள்
வேடசந்தூர் கோர்ட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆஜராக வந்தபோது எடுத்த படம்.

தமிழகத்தின் சூப்பர் முதல்வராக கவர்னர் செயல்படுகிறார்- வேல்முருகன்

Published On 2018-07-16 08:09 GMT   |   Update On 2018-07-16 08:09 GMT
தமிழகத்தின் சூப்பர் முதல்வராக கவர்னர் பன்வாரிலால் புரோகித் செயல்படுகிறார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கூறினார்.
வடமதுரை:

திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி டாஸ்மாக் குடோனில் இருந்து கடந்த மாதம் 1-ந் தேதி மதுபான பாட்டில்களை ஏற்றிய லாரி சென்றது. வெள்ளபொம்மன்பட்டி பிரிவில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் லாரியை மறித்து தீவைத்தனர். இதில் மதுபாட்டில்களுடன் லாரி எரிந்து நாசமானது.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு வேடசந்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்காக வேல்முருகன் இன்று வேடசந்தூர் வந்தார். கோர்ட்டில் ஆஜராகி விட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி பிரச்சனைக்காக போராடியவர்கள் மீது பொய்வழக்கு போட்டு தமிழக அரசு சிறையில் அடைக்கின்றது. எங்கள் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தாலும் அதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம். தமிழகத்தில் இதுவரை இல்லாத மோசமான ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வருகிறார்.


காவல் துறையை கையில் வைத்து கொண்டு காட்டு தர்பார் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தின் சூப்பர் முதல்வராக கவர்னர் பன்வாரிலால் புரோகித் செயல்படுகிறார். அதற்கு தமிழக அரசும் துதிபாடி வருகிறது. பாரதிய ஜனதா உதவியுடன் தமிழக அரசு கைகோர்த்து போராட்டம் நடத்தும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #Velmurugan #BanwarilalPurohit
Tags:    

Similar News