செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்- தம்பிதுரை

Published On 2018-03-02 08:02 GMT   |   Update On 2018-03-02 08:02 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வின் அனைத்து உறுப்பினர்களும் குரல் எழுப்பி வாரியம் அமைக்க பாடுபடுவோம் என்று தம்பிதுரை கூறினார். #Cauveryissue
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற 5-ந்தேதி பாராளுமன்ற கூட்டத் தொடர் கூடுகிறது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வின் அனைத்து உறுப்பினர்களும் குரல் எழுப்புவோம். வாரியம் அமைக்க பாடுபடுவோம்.


ஆந்திராவில் செம்மரம் வெட்ட வருவதாக கூறி தமிழர்கள் 84 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழர்கள் தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம். முதல்-அமைச்சர் மீது வெற்றிவேல் ஊழல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பற்றி எனக்கு தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

Tags:    

Similar News