செய்திகள்

மானிய விலை ஸ்கூட்டரில் கமி‌ஷன் அடித்துள்ளனர்: இளங்கோவன் பேட்டி

Published On 2018-02-25 15:53 IST   |   Update On 2018-02-25 15:53:00 IST
பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஸ்கூட்டருக்கும் எவ்வளவு கமி‌ஷன் அடித்தார்கள்? என்பது இனி தான் தெரியவரும் என்று இளங்கோவன் பேசியுள்ளார். #ammascooty #evkselangovan #kamal

ஈரோடு:

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

நடிகர் கமல்ஹாசன் பொதுக்கூட்டம் கூட்டி கட்சி ஆரம்பித்து நல்ல விதமாக தோடங்கி இருக்கிறார். தெளிவாகத் தான் பேசியும் உள்ளார்.

ஆனால் அவர் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அழைத்த பேச வைத்தது தவறு. கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியையும், திராவிட கட்சிகளையும் தாக்கி பேசி உள்ளார். இது கெஜ்ரிவாலுக்கு தேவையற்றது.


பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்திருந்தார். ஆனால் அவர் காவிரி மேலாண்மை பற்றி எதுவும் பேசவில்லை. உடனடியாக காவிரி மேலாண்மை அமைக்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோடி பிரதமராக இருந்திருந்தால் தமிழ்நாட்டுக்கு திட்டங்களை அறிவித்து இருப்பார். ஆனால் அவர் ஊர் சுற்றும் நாடோடியாக இருப்பதால் அவரால் தமிழ் நாட்டுக்கு எந்த திட்டங்களும் செயல்படுத்த முடியவில்லை.

அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் திறக்கப்பட்ட ஜெயலலிதா சிலை பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு விதமாக கூறப்பட்டு வருகிறது. ஜெயலலிதா சிலைக்கு கீழே இது தான் ஜெயலலிதா சிலை என்று பெயர் பலகையை அ.தி.மு.க. வினர் வைத்தால் நன்றாக இருக்கும்.

பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஸ்கூட்டருக்கும் எவ்வளவு கமி‌ஷன் அடித்தார்கள்? என்பது இனி தான் தெரியவரும்.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.#tamilnews #ammascooty #evkselangovan #kamal

Similar News