செய்திகள்
அ.தி.மு.க., தி.மு.க. தவிர பிற கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம்: ராமதாஸ்
அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் தவிர வேறு எந்த கட்சியும் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால், அவர்களை ஏற்றுக்கொள்வோம் என சிதம்பரத்தில் நடந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசியுள்ளார்.
சிதம்பரம்:
மது ஒழிப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக உச்சநீதிமன்றம் வரை சென்று சட்ட போராட்டத்தின் மூலம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடச்செய்ததற்காக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோருக்கு பாராட்டு விழா-வெற்றிவிழா பொதுக்கூட்டம் சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் நேற்று இரவு நடைபெற்றது.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மாநில தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் குரு, சமூக நீதிப்பேரவை தலைவர் வக்கீல் பாலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
உச்சநீதிமன்றம் வரை சென்று நாம் போராடியதால், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. மதுவால் இந்தியாவில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இறக்கிறார்கள். பீகாரில் முதல்- அமைச்சர் நிதீஷ்குமார் பூரண மதுவிலக்கை கொண்டுவந்துள்ளார். அவருக்கு பா.ம.க. சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் தாமாகவே முன்வந்து போராட்டம் நடத்தி மூடச்செய்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்துவிட்ட தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளை நீங்கள் தூக்கி எறியுங்கள். மாற்றம் இருந்தால்தான் முன்னேற்றம் வரும். மாற்றத்தை நீங்கள் கொடுங்கள், முன்னேற்றத்தை அன்புமணி ராமதாஸ் தருவார்.
தமிழகத்தில் உயர்கல்வித்துறையில் ஊழல் நடக்கிறது. ஊழலுக்கு 9 வழிகள் என்பார்கள். ஆனால் தற்போது நடைபெறும் ஊழலை பார்த்தால், அதற்கு எத்தனை வழிகள் என்பதே தெரியவில்லை. தமிழக சட்டசபையில் மறைந்த ஜெயலலிதாவின் படத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவரது படம் தேவைதானா?. தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் குடிநீருக்காக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க ஆகிய கட்சிகள் மாறி, மாறி ஆட்சி நடத்துகிறார்கள். இதில் மாற்றம் வேண்டும். இதற்காக தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் தவிர வேறு எந்த கட்சியும் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால், அவர்களை ஏற்றுக்கொள்வோம்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
இனிவரும் காலங்களில் தமிழகத்தை நல்ல ஆட்சியாளர்கள் ஆள வாய்ப்பு கொடுங்கள். அண்ணாமலை பல்கலைக்கழகத்தை சீரமைக்க பல போராட்டங்களை பா.ம.க. நடத்தியது. தற்போதும் இந்த பல்கலைக்கழகம் சீர்கெட்டு கிடக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. எனவே அண்ணாமலை பல்கலைக்கழகத்தை சீர்படுத்தவில்லையென்றால், பா.ம.க. சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தில் எண்ணை கிணறுகள் இருக்கக்கூடாது, அனைத்தையும் தூக்கி எறிய வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டக்கோரி எனது தலைமையில் பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்தில் இளைஞர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் மிக மோசமான ஆட்சி நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் தூக்கி எறிய வேண்டும். தமிழ்நாட்டை காக்க மாற்றம் வேண்டும். அந்த மாற்றத்தை நான் கொடுப்பேன், தமிழக மக்கள் என்னோடு இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
மது ஒழிப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக உச்சநீதிமன்றம் வரை சென்று சட்ட போராட்டத்தின் மூலம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடச்செய்ததற்காக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோருக்கு பாராட்டு விழா-வெற்றிவிழா பொதுக்கூட்டம் சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் நேற்று இரவு நடைபெற்றது.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மாநில தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் குரு, சமூக நீதிப்பேரவை தலைவர் வக்கீல் பாலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
உச்சநீதிமன்றம் வரை சென்று நாம் போராடியதால், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. மதுவால் இந்தியாவில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இறக்கிறார்கள். பீகாரில் முதல்- அமைச்சர் நிதீஷ்குமார் பூரண மதுவிலக்கை கொண்டுவந்துள்ளார். அவருக்கு பா.ம.க. சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் தாமாகவே முன்வந்து போராட்டம் நடத்தி மூடச்செய்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்துவிட்ட தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளை நீங்கள் தூக்கி எறியுங்கள். மாற்றம் இருந்தால்தான் முன்னேற்றம் வரும். மாற்றத்தை நீங்கள் கொடுங்கள், முன்னேற்றத்தை அன்புமணி ராமதாஸ் தருவார்.
தமிழகத்தில் உயர்கல்வித்துறையில் ஊழல் நடக்கிறது. ஊழலுக்கு 9 வழிகள் என்பார்கள். ஆனால் தற்போது நடைபெறும் ஊழலை பார்த்தால், அதற்கு எத்தனை வழிகள் என்பதே தெரியவில்லை. தமிழக சட்டசபையில் மறைந்த ஜெயலலிதாவின் படத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவரது படம் தேவைதானா?. தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் குடிநீருக்காக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க ஆகிய கட்சிகள் மாறி, மாறி ஆட்சி நடத்துகிறார்கள். இதில் மாற்றம் வேண்டும். இதற்காக தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் தவிர வேறு எந்த கட்சியும் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால், அவர்களை ஏற்றுக்கொள்வோம்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
இனிவரும் காலங்களில் தமிழகத்தை நல்ல ஆட்சியாளர்கள் ஆள வாய்ப்பு கொடுங்கள். அண்ணாமலை பல்கலைக்கழகத்தை சீரமைக்க பல போராட்டங்களை பா.ம.க. நடத்தியது. தற்போதும் இந்த பல்கலைக்கழகம் சீர்கெட்டு கிடக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. எனவே அண்ணாமலை பல்கலைக்கழகத்தை சீர்படுத்தவில்லையென்றால், பா.ம.க. சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தில் எண்ணை கிணறுகள் இருக்கக்கூடாது, அனைத்தையும் தூக்கி எறிய வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டக்கோரி எனது தலைமையில் பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்தில் இளைஞர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் மிக மோசமான ஆட்சி நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் தூக்கி எறிய வேண்டும். தமிழ்நாட்டை காக்க மாற்றம் வேண்டும். அந்த மாற்றத்தை நான் கொடுப்பேன், தமிழக மக்கள் என்னோடு இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.