செய்திகள்
ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தாமல் இருந்தது ஏன்?: ஓ.பன்னீர்செல்வத்துக்கு திருநாவுக்கரசர் கேள்வி
2 மாதம் முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தாமல் இருந்தது ஏன்? என ஓ.பன்னீர்செல்வத்துக்கு திருநாவுக்கரசர் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஈரோடு:
திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் ஈரோடு வந்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழக மீனவரை இலங்கை கடற்படை சுட்டு கொன்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பலியான தமிழக மீனவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் எரிவாயு திட்டத்தை கண்டித்து பொதுமக்கள் இளைஞர்கள் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மக்கள் கோரிக்கையை ஏற்று இந்த போராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
வார்தா புயல் சேதம் தற்போதுள்ள வறட்சி காரணமாக தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.85 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டிருந்தது. ஆனால் மத்திய அரசோ இதுவரை ரூ.1900 கோடிதான் ஒதுக்கீடு செய்துள்ளது. இது தமிழக அரசை மத்திய அரசு வஞ்சிக்கும் செயல் ஆகும்.
மத்திய அரசின் ரூ.1000, ரூ.500 நோட்டை செல்லாது என்ற அறிவிப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 90 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் அவலம் உள்ளது. மக்களுக்காகத்தான் திட்டம் என்று இருக்க வேண்டுமே தவிர திட்டத்துக்காக மக்கள் இருக்க கூடாது. வேலை வாய்ப்பை அரசு பெருக்க வேண்டும்.
மத்தியில் பா.ஜ.க. அரசு வந்து 3 ஆண்டு ஆகிறது. இந்த 3 ஆண்டில் அவர்கள் என்ன செய்தார்கள்? வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? கிடையாது. சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஏழைகளின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்ற வாக்குறுதி கொடுத்தார்களே... அது என்னாச்சி?
ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் தான் முதல் அமைச்சராக இருந்தார். கிட்டத்தட்ட 2 மாதமாக அவர் முதல்வராக இருந்திருக்கிறார். அப்போது ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை வைத்திருக்கலாம் அல்லவா? அதை விட்டு இப்போது பதவி போன பிறகு நீதி விசாரணை கேட்கிறார். அப்போது அவர் வாய் திறந்திருக்கலாம் அல்லவா?
ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்தபோது அவர் மூலம் தமிழ்நாட்டில் கால் ஊன்ற பா.ஜனதா முயன்றது. இப்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி மூலம் கால் ஊன்ற பா.ஜனதா முயற்சிக்கிறது.
அடுத்த வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது. அப்போது தி.மு.க.வினர் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக கூறி உள்ளனர். எங்களது (காங்கிரசின்) நிலைப்பாட்டை சட்டசபை கூடும்போது அறிவிப்போம்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் ஈரோடு வந்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழக மீனவரை இலங்கை கடற்படை சுட்டு கொன்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பலியான தமிழக மீனவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் எரிவாயு திட்டத்தை கண்டித்து பொதுமக்கள் இளைஞர்கள் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மக்கள் கோரிக்கையை ஏற்று இந்த போராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
வார்தா புயல் சேதம் தற்போதுள்ள வறட்சி காரணமாக தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.85 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டிருந்தது. ஆனால் மத்திய அரசோ இதுவரை ரூ.1900 கோடிதான் ஒதுக்கீடு செய்துள்ளது. இது தமிழக அரசை மத்திய அரசு வஞ்சிக்கும் செயல் ஆகும்.
மத்திய அரசின் ரூ.1000, ரூ.500 நோட்டை செல்லாது என்ற அறிவிப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 90 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் அவலம் உள்ளது. மக்களுக்காகத்தான் திட்டம் என்று இருக்க வேண்டுமே தவிர திட்டத்துக்காக மக்கள் இருக்க கூடாது. வேலை வாய்ப்பை அரசு பெருக்க வேண்டும்.
மத்தியில் பா.ஜ.க. அரசு வந்து 3 ஆண்டு ஆகிறது. இந்த 3 ஆண்டில் அவர்கள் என்ன செய்தார்கள்? வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? கிடையாது. சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஏழைகளின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்ற வாக்குறுதி கொடுத்தார்களே... அது என்னாச்சி?
ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் தான் முதல் அமைச்சராக இருந்தார். கிட்டத்தட்ட 2 மாதமாக அவர் முதல்வராக இருந்திருக்கிறார். அப்போது ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை வைத்திருக்கலாம் அல்லவா? அதை விட்டு இப்போது பதவி போன பிறகு நீதி விசாரணை கேட்கிறார். அப்போது அவர் வாய் திறந்திருக்கலாம் அல்லவா?
ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்தபோது அவர் மூலம் தமிழ்நாட்டில் கால் ஊன்ற பா.ஜனதா முயன்றது. இப்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி மூலம் கால் ஊன்ற பா.ஜனதா முயற்சிக்கிறது.
அடுத்த வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது. அப்போது தி.மு.க.வினர் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக கூறி உள்ளனர். எங்களது (காங்கிரசின்) நிலைப்பாட்டை சட்டசபை கூடும்போது அறிவிப்போம்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.