செய்திகள்
3 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்: மு.க.ஸ்டாலின்
தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிகள் தமிழகம், பாண்டிச்சேரியில் நடக்கும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை அவர் மூலமாக வெளியே வந்ததா? அல்லது திரைமறைவில் இருந்து யாரோ கொடுத்து இருக்கிறார்களா? அவர்கள் கொடுத்து இருந்தால் மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று கூறியிருப்பார்.
வங்கி வாசலில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து இருக்கிறார்கள். ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள், வணிக மக்கள் அல்லல்படுகிறார்கள். அதைப் பற்றி ஒரு அறிக்கை கூட இந்த அரசு வெளியிடவில்லை. நேற்று முதல்-அமைச்சர் உடல் நலம் பெற்றுவிட்டதாக சொல்லி இருக்கிறார். அதில் எங்களுக்கு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
ஆனால் வெளியிட்ட அறிக்கை தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெறுகின்ற தேர்தல் வாக்கு சேகரிப்பு நிலைதான் அந்த அறிக்கை. மக்கள் அவதிப்பற்றி கொஞ்சம் கூட அதில் இடம் பெறவில்லை. அதனால் அவர்தான் இந்த அறிக்கை வெளியிட்டாரா? அல்லது திரைமறைவில் இருந்து யாரும் வெளியிட்டார்களா? என சந்தேகம் எழுந்துள்ளது.
கருப்பு பணம் மற்றும் கள்ள பணம் ஒழிப்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதியும், மற்ற கட்சி தலைவர்களும் பொதுவாக வரவேற்கிறோம். மக்கள் படும் அவதிக்கு உடனடியாக பரிகாரம் காண வேண்டும்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் என்று சொல்கிறார். ஆனால் ஜல்லிக்கட்டு நடக்கும் நிலையில் இல்லை என்று செய்திகள் வந்திருக்கிறது. இதற்கு அவர் தான் பதில் அளிக்க வேண்டும்.
தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிகள் தமிழகம், பாண்டிச்சேரியில் நடக்கும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற போகிறது.
வடகிழக்கு பருவமழை தாமதத்தால் விவசாயிகள் அச்சம் மட்டும் படவில்லை. தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். இதைபற்றி இந்த அரசு கவலைப்படவில்லை.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை அவர் மூலமாக வெளியே வந்ததா? அல்லது திரைமறைவில் இருந்து யாரோ கொடுத்து இருக்கிறார்களா? அவர்கள் கொடுத்து இருந்தால் மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று கூறியிருப்பார்.
வங்கி வாசலில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து இருக்கிறார்கள். ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள், வணிக மக்கள் அல்லல்படுகிறார்கள். அதைப் பற்றி ஒரு அறிக்கை கூட இந்த அரசு வெளியிடவில்லை. நேற்று முதல்-அமைச்சர் உடல் நலம் பெற்றுவிட்டதாக சொல்லி இருக்கிறார். அதில் எங்களுக்கு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
ஆனால் வெளியிட்ட அறிக்கை தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெறுகின்ற தேர்தல் வாக்கு சேகரிப்பு நிலைதான் அந்த அறிக்கை. மக்கள் அவதிப்பற்றி கொஞ்சம் கூட அதில் இடம் பெறவில்லை. அதனால் அவர்தான் இந்த அறிக்கை வெளியிட்டாரா? அல்லது திரைமறைவில் இருந்து யாரும் வெளியிட்டார்களா? என சந்தேகம் எழுந்துள்ளது.
கருப்பு பணம் மற்றும் கள்ள பணம் ஒழிப்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதியும், மற்ற கட்சி தலைவர்களும் பொதுவாக வரவேற்கிறோம். மக்கள் படும் அவதிக்கு உடனடியாக பரிகாரம் காண வேண்டும்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் என்று சொல்கிறார். ஆனால் ஜல்லிக்கட்டு நடக்கும் நிலையில் இல்லை என்று செய்திகள் வந்திருக்கிறது. இதற்கு அவர் தான் பதில் அளிக்க வேண்டும்.
தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிகள் தமிழகம், பாண்டிச்சேரியில் நடக்கும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற போகிறது.
வடகிழக்கு பருவமழை தாமதத்தால் விவசாயிகள் அச்சம் மட்டும் படவில்லை. தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். இதைபற்றி இந்த அரசு கவலைப்படவில்லை.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.