செய்திகள்

ஓட்டுக்கு பணப்பட்டுவாடா: அரவக்குறிச்சியை தொடர்ந்து தஞ்சை தொகுதிக்கான தேர்தலும் ஒத்திவைப்பு

Published On 2016-05-15 23:24 IST   |   Update On 2016-05-15 23:24:00 IST
ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தெரிந்ததை அடுத்து அரவக்குறிச்சியை தொடர்ந்து தஞ்சை தொகுதிக்கான தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை:

நேற்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் அளவுக்கு அதிகமாக பண வினியோகம் இருப்பதாகக் கூறி, அத்தொகுதியின் வாக்குப்பதிவை மே 23-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.

இந்நிலையில் தஞ்சை தொகுதியிலும் வாக்காளர்களுக்கு அதிகளவு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுக்கப்பட்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கையை அடுத்து, தஞ்சை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தஞ்சை தொகுதிக்கான தேர்தல் 23-ம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை 25-ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Similar News