செய்திகள்

தென்காசி தொகுதி விவசாயிகள், தொழிலாளர்கள் வளம் பெற தி.மு.க கூட்டணியை ஆதரியுங்கள்: வேட்பாளர் பழனி நாடார் வேண்டுகோள்

Published On 2016-05-07 16:27 IST   |   Update On 2016-05-07 16:27:00 IST
தென்காசி தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் போட்டியிடுகிறார். அவர் தென்காசி நகராட்சியில் 12-வது வார்டு முதல் நகராட்சி பகுதிகளில் கைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தென்காசி:

தென்காசி தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் போட்டியிடுகிறார். அவர் தென்காசி நகராட்சியில் 12-வது வார்டு முதல் நகராட்சி பகுதிகளில் கைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசும்போது “தி.மு.க காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட விபரங்களில் பலவற்றை காப்பி அடித்து அ.தி.மு.க தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. குற்றாலத்தை இன்னும் சீராக்கி உலக வரைபடத்தில் இடம்பெற செய்ய பாடுபடுவேன். அனைத்து அருவி பகுதிகளிலும் முழு சுகாதார வசதி செய்து கொடுக்கப்படும். சுற்றுலா பயணிகள் நலனை கருத்தில் கொண்டு நலத்திட்டங்கள் செயல்படுத்தபடும்.

தென்காசி தொகுதியில் தொழில்வளம் பெருகிடவும் மருத்துவமனை சிறப்பாக செயல்படவும் தீவிரமாக பாடுபடுவேன். எனவே உங்களுக்கு உழைத்திட கைச்சின்னத்திற்கு வாக்களித்து கலைஞர் தலைமையில் நல்லாட்சி மலர்ந்திட உங்களை கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News