லைஃப்ஸ்டைல்
குடவாழை அரிசி பொங்கல்

குடவாழை அரிசி பொங்கல்

Published On 2020-01-09 04:36 GMT   |   Update On 2020-01-09 04:36 GMT
குடவாழை அரிசி குடலை சுத்தப்படுத்தக்கூடியது. செரிமானக்கோளாறை நீக்குவதுடன் வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல மருந்தாகும்.
தேவையான பொருட்கள்:

குடவாழை அரிசி - கால் கிலோ
கரும்பு வெல்லம் - 200 கிராம்
பச்சை பயிறு - 100 கிராம்
மாதுளம் பழம் முத்துக்கள் - 100 கிராம்



செய்முறை:

கரும்பு வெல்லத்தை பொடித்து கொள்ள வேண்டும்.

குடவாழை அரிசியை 16 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பச்சை பயிரை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பச்சைப் பயிறு, குடவாழை அரிசியை நன்றாக கழுவி குக்கரில் போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

அதனுடன் பொடித்த கரும்பு வெள்ளத்தை சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில் வந்தவுடன் இறக்கவும். விசில் போனவுடன் மூடியை திறந்து மாதுளம் பழம் முத்துக்களை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

சூடான சுவையான குடவாழை அரிசி பொங்கல் ரெடி.

B. இந்துமதி

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News