பெண்கள் உலகம்
தக்காளி இளநீர் கிளியர் சூப்

தக்காளி இளநீர் கிளியர் சூப்

Published On 2019-12-20 10:08 IST   |   Update On 2019-12-20 10:08:00 IST
தக்காளி இளநீர் கிளியர் சூப் சாப்பிடுபவர்களுக்கு உடல் சூடு இருக்காது. இந்த சூப்பை எப்படி செய்வது என்று அறிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்

தக்காளிச் சாறு - கால் கப்,
இளநீர் - 2 கப் (அதிக இனிப்பு இல்லாத இளநீராக இருக்க வேண்டும்),
இஞ்சிச் சாறு - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
உப்பு - சிறிதளவு.
நெய் - ஒரு டீஸ்பூன்,
பூண்டு - 2 பல் (விருப்பப்பட்டால்).
கடுகு - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்



செய்முறை


கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பூண்டை நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தக்காளிச் சாறு, இளநீர், இஞ்சிச் சாறு, உப்பு சேர்த்து நுரை வரும் வரை கிளற வேண்டும்.

அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், சீரகம், வெந்தயம், பூண்டு போட்டு தாளித்த பின்னர் இளநீர் கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

கடைசியாக, அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து சுடசுட சாப்பிடுங்கள்.

சூப்பரான தக்காளி இளநீர் கிளியர் சூப் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News