லைஃப்ஸ்டைல்
சிவப்பு அரிசி பாலக்கீரை காய்கறி சூப்

சிவப்பு அரிசி பாலக்கீரை காய்கறி சூப்

Published On 2019-12-06 04:42 GMT   |   Update On 2019-12-06 04:42 GMT
அல்சர் இருப்பவர்களுக்கு இந்த சூப் மிகவும் நல்லது. இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சிவப்பு அரிசி - அரை கப்,
உளுந்து - கால் கப்,
வெங்காயம், தக்காளி - தலா 1
முட்டைகோஸ், பாலக்கீரை, புரோக்கோலி - தலா ஒரு கப்,
புதினா இலைகள் - சிறிதளவு,
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.



செய்முறை:

தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ், பாலக்கீரை, புரோக்கோலியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சிவப்பரிசி, உளுந்தை வாசனை வரும் வரை வறுத்து, மிக்சியில் போட்டு ரவை போல் உடைத்து கொள்ளவும்.

இந்த ரவையுடன், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், தக்காளி, வெங்காயம், பாலக்கீரை, புரோக்கோலி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து பிரஷர் பேன் (pan) அல்லது சின்ன குக்கரில் சேர்த்து மூடி, 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

ஆறியதும் நன்கு மிளகுத்தூள் கலந்து, புதினா இலைகளால் அலங்கரித்துப் பரிமாறவும்.

சிவப்பு அரிசி பாலக்கீரை காய்கறி சூப் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News