லைஃப்ஸ்டைல்
கேரட் தக்காளி சூப்

சத்து நிறைந்த கேரட் தக்காளி சூப்

Published On 2019-10-16 04:26 GMT   |   Update On 2019-10-16 04:26 GMT
தினமும் ஏதாவது சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று கேரட், தக்காளி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

கேரட் - 1,
பழுத்த பெங்களூர் தக்காளி - 3,
பெரிய வெங்காயம் - 1/2 அளவு,
கொத்தமல்லித்தழை - சிறிது,
தண்ணீர் - 400 மி.லி.,
உப்பு, மிளகுத் தூள் - தேவைக்கு,
கிராம்பு - 2,
பூண்டு - 2 பல்,
பட்டை - 1/2 இன்ச் அளவு.



செய்முறை

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், கேரட், பூண்டு, பட்டை, கிராம்பு, மிளகுத் தூள், தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 2 விசில் விட்டு தக்காளியை வேக விடவும்.

சூடு ஆறியதும் நன்கு மசித்து வடித்துக் கொள்ளவும்.

குறைவான சூட்டில் 300 மி.லி. வரும் வரை சூப்பைச் சூடு செய்து, உப்பு சேர்த்து கலந்து, கடைசியாக நறுக்கிய கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.

சூப்பரான கேரட் தக்காளி சூப் ரெடி.

குறிப்பு:

சூப்பை கொதிக்க வைத்தால் அதிலுள்ள சத்துக்கள் வீணாகி விடும். ஆகவே பாத்திரத்தை மூடியோ அல்லது குக்கரில் வைத்தோ சூப் செய்யவும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News