லைஃப்ஸ்டைல்
மூங்கில் அரிசி காய்கறி சூப்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த அருமையான சூப்

Published On 2019-09-17 04:33 GMT   |   Update On 2019-09-17 05:16 GMT
சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகிப் போனவர்களை மறுபடியும் சீரான உடலமைப்பைப் பெறச் செய்யும் உன்னதமே மூங்கிலரிசியாகும். இன்று மூங்கில் அரிசி, காய்கறி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மூங்கில் ரைஸ் (‘காதி கிராஃப்ட்’டில் கிடைக்கும்) - ஒரு கப்,
கேரட் - ஒன்று,
பட்டாணி - ஒரு கப்,
பீன்ஸ் - 5,
வெங்காயம் - ஒன்று,
பூண்டு - 2 பல்,
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு,
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு,

 


செய்முறை :

பூண்டு, வெங்காயம், கொத்தமல்லி, பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

மூங்கில் அரிசியில் கல் இருந்தால் நீக்கிவிட்டு, கழுவி 15 நிமிடம் ஊற வைத்து சாதம் சமைப்பது போல் சமைக்கவும். (குக்கரில் போட வேண்டாம்). வடிகஞ்சியையும் உபயோகிக்கவும்.

கடாயில் வெண்ணெய் போட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட், பீன்ஸ், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

இதனுடன் வேக வைத்த பட்டாணியும் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் உப்பு, மிளகுதூள், வடித்த கஞ்சியை சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு, காய்கறி பாதி வெந்தவுடன் மூங்கில் அரிசியை சேர்த்து, கொதி வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி, இறக்கி பரிமாறவும்.

சத்தான மூங்கில் அரிசி காய்கறி சூப் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News