லைஃப்ஸ்டைல்
பிரண்டை முருங்கை இலை கஞ்சி

பிரண்டை முருங்கை இலை கஞ்சி

Published On 2019-09-10 04:13 GMT   |   Update On 2019-09-10 04:13 GMT
இந்த கஞ்சியை இரண்டு வேளை குடித்து வந்தால் தீராத இடுப்பு வலி, உடம்பில் உண்டாகும் வாயுக்கள் அனைத்தையும் குணப்படுத்தும். இந்த கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பிரண்டை - 1 கைப்பிடி
முருங்கை இலை - ஒரு கைப்பிடி
தூது வளை - 1 கைப்பிடி
அரிசி - அரை கப்
உப்பு - தேவையான அளவு.



செய்முறை

அரிசியை மிக்சியில் போட்டு நெய் போல் உடைத்து கொள்ளவும்.

பிரண்டை, தூதுவளை, முருங்கை இலையை நன்றாக சுத்தம் செய்து அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து கால் லிட்டராகும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பின்பு கொதிக்க வைத்த நீரை வடிகட்டி வைத்து கொள்ளவும்.

குக்கரில் வடிகட்டிய நீருடன் அரிசி நெய், உப்பு போட்டு 6 விசில் போட்டு நன்கு வேக வைத்து இறக்கி சூடாக பருகவும்.

சத்தான பிரண்டை, முருங்கை இலை கஞ்சி ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News