உடற்பயிற்சி
மகா சிரசு முத்திரை

மகா சிரசு முத்திரை செய்தால் தீரும் உடல் பிரச்சனைகள்

Published On 2022-03-01 08:01 IST   |   Update On 2022-03-01 08:01:00 IST
“என் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்“ என்பதற்கேற்ப நமது தலையில் உள்ள அனைத்து உறுப்புகளும் நன்கு சக்தி பெற்று இயங்கும். முகத்தில் உள்ள எல்லா உறுப்புகளும் பிராண சக்தி பெற்று இயங்கும்.
நிமிர்ந்து விரிப்பில் அமரவும். முதுகு எலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள்செய்யவும். பின் உங்கள் கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிப் பகுதிகளையும் ஒன்றையொன்று தொடும்படி வைக்கவும். மோதிர விரலை மடக்கி உள்ளங்கையின் நடுவில் தொடுமாறு வைக்கவும். சுண்டு விரல் நேராக இருக்கட்டும். படத்தைப் பார்க்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.

பலன்கள்:“என் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்“ என்பதற்கேற்ப நமது தலையில் உள்ள அனைத்து உறுப்புகளும் நன்கு சக்தி பெற்று இயங்கும். முகத்தில் உள்ள எல்லா உறுப்புகளும் பிராண சக்தி பெற்று இயங்கும். இதனால் மூளை பகுதியில் உள்ள டென்ஷன் நீங்கும்.

தலைவலி நீங்கும். உடல் சூடு சமமாகும். அடிக்கடி தலைவலி வருபவர்கள் இந்த முத்திரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். கண் வலி வராது. கண்கள் நன்கு பிரகாசமாக இருக்கும். சைனஸ், மூக்கடைப்பு, சலி தொந்தரவு வராது. சுவாச உறுப்புகள் நன்றாக இயங்கும்.

முக பொலிவு உண்டாகும். முகத்தசைகள் சுருக்கமில்லாமல் பளபளப்புடன் பிராண ஆற்றல் பெற்று இயங்கும். கழுத்துவலி வராமல் பாதுகாக்கும். சுறுசுறுப்பும், உற்சாகமும் கிடைக்கும். மன அமைதி கிடைக்கும். தேவையற்ற எண்ணங்கள் நீங்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வாழலாம்.

யோகக் கலைமாமணி
பெ.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
63699 40440
pathanjaliyogam@gmail.com

Similar News