உலக கோப்பை கால்பந்து-2022

மானை வேட்டையாடி கறியை சமைத்த வாலிபர் கைது

Published On 2022-12-06 15:12 IST   |   Update On 2022-12-06 15:12:00 IST
  • அதிகாரிகள் ரோந்து பணியில் சிக்கினார்
  • வேலூர் ெஜயிலில் அடைப்பு

அணைக்கட்டு:

ஒடுக்கத்தூர் பரவமலை காப்பு காட்டில் நேற்று வனச்சர அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கீழ்கொத்தூர் கிராமத்தில் மான் கறியை வேட்டையாடி விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது மான் கறியை பாத்திரத்தில் வைத்து சமைத்துக் கொண்டிருந்தார்.

பின்னர் மான் கறியை பாத்திரத்துடன் பறிமுதல் செய்து வினோத் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். 

Tags:    

Similar News