உலக கோப்பை கால்பந்து-2022

திருமணத்திற்கு சென்ற புதுப்பெண் மாயம்

Published On 2023-08-21 09:04 GMT   |   Update On 2023-08-21 09:04 GMT
  • டீ குடிக்க செல்வதாக சென்றவர் மீண்டும் திரும்பவில்லை
  • போலீசார் விசாரணை

காவேரிப்பாக்கம்:

வேலூர் அடுத்த கம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது57). இவர் நேற்று முன்தினம் ஓச்சேரி பகுதியில் நடை பெற்ற உறவினர் திருமணத்திற்கு தன்னுடைய உறவினர் மகளுடன் சென்றுள்ளார்.

அப்போது டீ குடிக்க செல்வதாக திருமண மண்டபத்தில் இருந்து வெளியே சென்ற அந்தபெண் வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் இதுகுறித்து அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான பெண் ணுக்கு இரண்டு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News