வழிபாடு
இன்று மூன்றாம் வெள்ளிக்கிழமை: வரலட்சுமி விரதம் தரும் பலன்கள்
- தொழிலில் உபரி லாபம் உண்டாகும்.
- பதவி உயர்வு கிடைக்கும்.
ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையானது அன்னை காளிகாம்பாளுக்கு உகந்தது.
பார்வதி தேவியின் மற்றொரு வடிவமான காளிகாம்பாளை மூன்றாம் வெள்ளிக்கிழமையின் போது வேண்டினால், தைரியம் அதிகரிப்பதோடு, ஆரோக்கியமும் மேம்படும். கொடிய நோய் தாக்கம் குறையும். நிலையான தொழில் மற்றும் உத்தியோக அனுகூலம் உண்டாகும்.
தொழிலில் உபரி லாபம் உண்டாகும். முதலாளி, தொழிலாளிகளுக்கு இடையே உள்ள பிரச்சினைகள் சுமூகமாகும். பதவி உயர்வு கிடைக்கும்.
ஜாதகத்தில் சனி+ ராகு, கேது சேர்க்கையால் உருவாகும் இன்னல்கள் குறையும்.