வழிபாடு

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சட்டத்தேரோட்டம்

Published On 2022-11-01 13:05 IST   |   Update On 2022-11-01 13:05:00 IST
  • கந்தசஷ்டியின் 7-வது நாளும் முருகனுக்கு தங்க கவசம் சாத்தப்படுவது வழக்கம்.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது.திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளாக கடந்த 29-ந் தேதி வேல் வாங்குதலும் 30-ந்தேதி சூரசம்ஹாரமும் நடைபெற்றது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது.தேரோட்டத்தையொட்டி கோவில் வாசல் முன்பு சட்டத்தேர் அலங்கரிக்கப்பட்டு தயாராக நின்றது, இதனையடுத்து கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமிக்கு மகாஅபிஷேகமும், சர்வஅலங்காரமும் தீப தூப, ஆராதனையும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து தன்இருப்பிடத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு சட்டத்தேரில் காலை 9.05மணிக்கு எழுந்தருளினார்.

காலை 9.15 மணிக்கு நிலையில் இருந்து தேர் புறப்பட்டு சன்னதி தெரு கீழ ரத வீதி, பெரிய ரத வீதி வழியாக 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் சட்டத்தேர் ஆடி அசைந்து வலம் வந்தது. தேரை பக்தர்கள் அரோகரா பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். காலை 11.35 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.

தமிழ்புத்தாண்டு தினத்திலும், கந்தசஷ்டியின் 7-வது நாளும் முருகபெருமானுக்கு தங்க கவசம் சாத்தப்படுவது வழக்கம். அதன்படி கந்தசஷ்டியையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் முருகபெருமான் காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News