வழிபாடு

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2022-12-02 07:09 GMT   |   Update On 2022-12-02 07:09 GMT
  • திருவிழா இன்று தொடங்கி 18-ந்தேதி வரை நடக்கிறது.
  • 16-ந்தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு நடக்கிறது.

சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 18-ந் தேதி வரை நடக்கிறது. இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு திருநடை திறப்பு, காலை 6 மணிக்கு பணிவிடை, மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலை 4 மணிக்கு மலர் அலங்காரத்துடன் வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை போன்றவை நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஏடு வாசிப்பு தொடங்கப்பட்டு சாமிதோப்பு தலைமைப்பதி தலைமைகுரு பால ஜனாதிபதி விளக்கவுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு வாகன பவனி நடக்கிறது.

தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலையில் பணிவிடை, மதியம் உச்சி படிப்பும், மாலையில் ஏடு வாசிப்பு, இரவில் வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது. விழாவில் 16-ந் தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு, அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, தொடர்ந்து வைகுண்டசாமிக்கு பக்தர்கள் திருக்கல்யாண சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி, இனிமம் வழங்குதல் போன்றவையும், 18-ந் தேதி திருஏடு வாசிப்பு, அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேகம் ஆகியவையும் நடைபெறும்.

Tags:    

Similar News