வழிபாடு

சீனிவாசமங்காபுரம் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் இன்று தொடக்கம்

Published On 2023-05-10 04:33 GMT   |   Update On 2023-05-10 04:33 GMT
  • வசந்தோற்சவம் இன்று தொடங்கி 12-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
  • நாளை தங்கத் தேரோட்டம் நடக்கிறது.

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் இன்று (புதன்கிழமை) தொடங்கி 12-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை தங்கத் தேரோட்டம் நடக்கிறது. தினமும் மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.

முதல் 2 நாட்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் மற்றும் 3-வதுநாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ராமர் மற்றும் ருக்மனி, சத்தியபாமா சமேத கிருஷ்ணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.

மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News