வழிபாடு

சிவந்தியப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா:சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் ஊர்வலம்

Published On 2022-10-19 05:06 GMT   |   Update On 2022-10-19 05:06 GMT
  • சுவாமி -அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் ஏக சிம்மாசனத்தில் அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சுவாமி- அம்பாள் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் நேற்று காலை சுவாமி -அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் ஊர்வலமாக பாபநாசம் கோவிலுக்கு சென்று அடைந்தனர். அங்கு கோவில் முன்பு உள்ள படித்துறையில் ஐப்பசி விசு தீர்த்தவாரி நிகழ்ச்சி, இரவில் பஞ்சமூர்த்தி அலங்கார தீபாராதனை, வீதி உலா வருதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News