வழிபாடு

பொறையாறு அய்யனார் கோவில் குடமுழுக்கு: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2022-11-15 04:04 GMT   |   Update On 2022-11-15 04:04 GMT
  • மகா தீபாராதனை காட்டப்பட்டது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பொறையாறில் பூரண புஷ்கலை திருமுடி அய்யனார் மகாசாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணி நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து குடமுழுக்கு நேற்று காலை நடை பெற்றது.

முன்னதாக கோவில் அருகே பிரமாண்டமாக யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை 7 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் கூற மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது.

பின்னர் விநாயகர், பூரண புஷ்கலையம்மன் அய்யனார், பிடாரி அம்மன், ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

குடமுழுக்கு விழாவில் பொறையாறு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஆர்.என்.ரூபேஷ்நாடார், டி.ஜி.ஆர். ஜெயக்குமார் நாடார், கோவில் நிர்வாகி ஜி.வெள்ளையன், விஜயாலயன்ஜெயக்குமார் நாடார் மற்றும் விழாக்குழுவினர், கிராம மக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News