வழிபாடு

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் வருஷாபிஷேகம் 7-ந்தேதி நடக்கிறது

Published On 2023-07-05 05:06 GMT   |   Update On 2023-07-05 05:06 GMT
  • இந்த கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
  • சன்னதிகளில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன் விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சவடியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி வருகிற 7-ந்தேதி வருஷாபிஷேக விழா (கும்பாபிஷேக தினம்) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை சீனிவாச பெருமாள் சன்னதிக்கு பின்புறம் உள்ள யாகசாலையில் காலை 7 மணி முதல் கடம் பிரதிஷ்டை செய்யப்பட்டு விசேஷ ஹோமங்கள் நடக்கிறது.

காலை 9 மணி அளவில் ஸ்ரீவலம்புரி மகா கணபதி, ஸ்ரீசீதா சமேத பட்டாபிஷேக ராமர், ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி மற்றும் 36 அடி உயரமுள்ள விஸ்வரூப ஜெய மங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகியோருக்கு பால், பன்னீர், சந்தனம் போன்ற மங்கல திரவியங்களால் விசேஷ திருமஞ்சனம் நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து கடம் புறப்பாடுடன் அனைத்து சன்னதிகளிலும் புனிதநீர் தெளிக்கப்படும். பகல் 11 மணிக்கு அலங்காரத்துடன் சன்னதிகளில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News