வழிபாடு

திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோவிலில் வராக ஜெயந்தி விழா

Published On 2023-04-18 12:59 IST   |   Update On 2023-04-18 12:59:00 IST
  • பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
  • இன்று மாலை 6 மணிக்கு புஷ்ப அலங்காரத்துடன் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.

கோவளம் அடுத்த திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோவிலில் இன்று வராக ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 9 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பெருமாளை தரிசித்தனர். இன்று மாலை 6 மணிக்கு புஷ்ப அலங்காரத்துடன் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.

இதே போல் மாமல்லபுரம் ஆதிவராக பெருமாள் கோயிலில் வராக ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் புஷ்ப அலங்காரத்துடன் சுவாமி மேற்கு ராஜவீதி, டி.கே.எம் சாலை, கிழக்கு ராஜவீதி, தெற்கு மாடவீதி, கலங்கரை விளக்கம் வழியாக வீதி உலா நடைபெற்றது.

Similar News