வழிபாடு

மாப்படுகைதங்க முனீஸ்வரர் கோவிலில் ஆடித்திருவிழா

Published On 2022-08-05 04:45 GMT   |   Update On 2022-08-05 04:45 GMT
  • தங்க முனீஸ்வரருக்கு ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவிக்கப்பட்டது.
  • பெண்கள் முளைப்பாரி தூக்கி சென்றனர்.

மயிலாடுதுறை அருகே மாப்படுகை தங்க முனீஸ்வரர் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தங்க முனீஸ்வரருக்கு ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவிக்கப்பட்டது.

மேலும் இக்கோவிலில் உள்ள விநாயகர், பேச்சியம்மன், தீர்த்தக்கர ராக்காயி அம்மன், வெள்ளையம்மன், மதுரைவீரன், பதினெட்டாம்படி சங்கிலி கருப்பு, நொண்டி கருப்பு, கோபுரத்தையா, புங்கமரத்து அம்மன் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சாமி வீதி உலா நடந்தது.

இதில் பக்தர்கள் கருப்பசாமி மற்றும் காளியம்மன் வேடமணிந்தும், பெண்கள் முளைப்பாரி தூக்கி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News