வழிபாடு

கருவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா 21-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது

Published On 2023-03-19 10:02 GMT   |   Update On 2023-03-19 10:02 GMT
  • ஏப்ரல் 4-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
  • 8-ந்தேதிபரிவேட்டை மற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

கருவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா 21-ந் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்குகிறது. 31-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், ஏப்ரல் 1-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. 4-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 5-ந் தேதி காலை அதிர்வேட்டு முழங்க அம்மன் திருத்தேருக்கு எழுந்தருள்கிறார்.

இதையடுத்து பக்தர்கள் ரதத்தின் மீது வீற்றிருக்கும் சாமியை தரிசனம் செய்கின்றனர். பின்னர் பிற்பகல் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 6, 7-ந் தேதிகளில் தேர் இழுக்கப்பட்டு நிலை வந்தடைகிறது. 8-ந் தேதிபரிவேட்டை மற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது. 9-ந் தேதிமஞ்சள் நீர் விழா நடைபெறுகிறது.

Similar News