வழிபாடு

பரக்கோணம் புனித லூர்து அன்னை ஆலய அர்ச்சிப்பு விழா

Published On 2022-09-21 05:23 GMT   |   Update On 2022-09-21 05:23 GMT
  • அர்ச்சிப்பு விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
  • அன்பின் விருந்து ஆலய வளாகத்தில் நடக்கிறது.

மார்த்தாண்டம் அருகே மேல்புறம் தல திருச்சபையின் கிளை பங்காகிய பரக்கோணத்தில் புனித லூர்து அன்னை ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களின் பொருளாதார உதவியால் அழகுற புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சிப்பு விழா நாளை(வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவில் கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி ஆலயத்தை அர்ச்சித்து வைக்கிறார்.

தொடர்ந்து அன்பின் விருந்து ஆலய வளாகத்தில் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் ஆல்வின் விஜய், பங்கு பேரவை துணைத்தலைவர் விஜயகுமார், செயலாளர் வைடா பொன்மலர், பொருளாளர் ஸ்டீபன், உதவி செயலாளர் டெய்சி மற்றும் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News