வழிபாடு

நாராயணவனம் கல்யாணவெங்கடேஸ்வரசாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நாளை நடக்கிறது

Published On 2023-05-23 06:43 GMT   |   Update On 2023-05-23 06:43 GMT
  • பிரம்மோற்சவ விழா 31-ந்தேதி தொடங்கி ஜூன் 8-ந்தேதி வரை நடக்கிறது.
  • கருவறை முதல் அனைத்துச் சன்னதிகளும் வாசனை கலவையால் சுத்தம் செய்யப்படும்.

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி மாவட்டம் நாராயணவனத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 31-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி வரை நடக்கிறது.

அதை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப் பணி 24-ந்தேதி நடக்கிறது. கோவில் வளாகத்தில் உள்ள மூலவர் கருவறை முதல் அனைத்துச் சன்னதிகளும் பரிமளம் என்ற வாசனை கலவையால் சுத்தம் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News