வழிபாடு

பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா: மார்ச் 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது

Published On 2023-02-24 06:12 GMT   |   Update On 2023-02-24 06:12 GMT
  • ஏப்ரல் 4-ந்தேதி பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள்.
  • ஏப்ரல் 7-ந்தேதி தங்க தேர் புறப்பாடு நடக்கிறது.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில். இங்கு கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வணங்கி செல்வார்கள்.

ஆண்டுதோறும் பங்குனி மாதம் இந்த கோவிலில் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் விழா அடுத்த மாதம் 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. பின்னர் 28-ந் தேதி இரவு கம்பம் சாட்டும் விழா நடக்கிறது.

முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 3-ந் தேதி இரவு தொடங்குகிறது. மறுநாள் 4-ந் தேதி அதிகாலை 4 மணி அளவில் பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 5-ந் தேதி மாலை பவுர்ணமி திருவிளக்கு பூஜையும், புஷ்பரதமும் நடைபெறுகிறது. 6-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 7-ந் தேதி தங்க தேர் புறப்பாடும் நடக்கிறது. 10-ந் தேதி நடக்கும் மறு பூஜை விழாவுடன் திருவிழா முடிவடைகிறது.

கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.

Tags:    

Similar News