வழிபாடு

சரல் நாராயணசாமி கோவிலில் கார்த்திகை திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2022-11-18 08:37 GMT   |   Update On 2022-11-18 08:37 GMT
  • விழா நாட்களில் தினமும் அய்யாவுக்கு பணிவிடை வழங்குதல் நடக்கிறது.
  • 25-ந்தேதி திருக்கல்யாண ஏடுவாசிப்பு நடக்கிறது.

சரல் நாராயணசாமி கோவிலில் கார்த்திகை திருவிழா மற்றும் திரு ஏடுவாசிப்பு விழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று அதிகாலை 5 மணிக்கு அய்யாவின் பக்தி பாடல்கள், காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, 9 மணிக்கு துவயல் தவசு, மாலை 5 மணிக்கு திருஏடுவாசிப்பு, இரவு 9.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை ஆகியவை நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் காலையில் அய்யாவுக்கு பணிவிடை, மாலையில் திருஏடுவாசிப்பு, இரவு அய்யாவுக்கு பணிவிடை, தர்மம் வழங்குதல் நடக்கிறது. 25-ந்தேதி இரவு 9 மணிக்கு திருக்கல்யாண ஏடுவாசிப்பு, இரவு 11 மணிக்கு பணிவிடை, 11.30 மணிக்கு இனிமம் வழங்குதல், 27-ந்தேதி பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, மதியம் 1 மணிக்கு அன்னதர்மம், இரவு 11 மணிக்கு நாராயணசாமி அலங்கார வாகனத்தில் பவனி வருதல், சிங்காரி மேளம், வாணவேடிக்கை ஆகியவை நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை சரல் நாராயணசாமி மற்றும் சிவசுடலைமாடசாமி கோவில்களின் ஊர் நிர்வாக கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News