வழிபாடு

ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திரதிருவிழா இன்று தொடக்கம்

Published On 2023-06-16 06:12 GMT   |   Update On 2023-06-16 06:12 GMT
  • ஆனித் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
  • 25-ந்தேதி பத்தாம் திருவிழா நடைபெற உள்ளது.

ஆறுமுகநேரியில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதனை ஒட்டி இன்று காலை சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடைபெற்று கொடிப்பட்டம் வீதி உலாவும், அதனை தொடர்ந்து கும்ப பூஜை, ஹோமம் ஆகியவை நடைபெறுகிறது தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறுகிறது. ஆனித் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

வரும் 25-ந்தேதி பத்தாம் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி மற்றும் இரவு ஆன்மீக சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், பக்தி பட்டிமன்றம், சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், தேவாரம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News