வழிபாடு
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் வைகாசி பெருவிழா தேரோட்டம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் வைகாசி பெருவிழா தேரோட்டம்

Published On 2022-05-20 08:32 GMT   |   Update On 2022-05-20 08:32 GMT
ஆதீன கட்டளை தம்பிரான்கள் முன்னிலையில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது.

மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஞானாம்பிகை உடனுறை ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கடந்த 12ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

தொடர்ந்து பட்டணப் பிரவேச விழாவை யொட்டி முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது.

சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினர். அதனை அடுத்து தீபாராதனைக்குப் பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் ஆதீன கட்டளை தம்பிரான்கள் முன்னிலையில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தருமபுர ஆதீனத்தின் நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், வருகிற 22ந் தேதி புகழ்பெற்ற பட்டணப் பிரவேசமும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றர்.
Tags:    

Similar News