வழிபாடு
திருவண்ணாமலை

சிவன் ஆலயத்தில் விதிகளின் படி இருக்க வேண்டியவை...

Published On 2022-05-18 08:08 GMT   |   Update On 2022-05-18 08:08 GMT
சிவன் ஆலயத்தில் பொதுவாக சில சன்னிதிகளோடு சேர்த்து மொத்தம் 25 பகுதிகள் இருக்க வேண்டும் என்பது விதி. அந்த 25 இடங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்..
1. இறைவன் வீற்றிருக்கும் கருவறை (மூலஸ்தானம்)

2. சிவாச்சாரியார்கள் பூஜை செய்யும் இடம் (அர்த்த மண்டபம்)

3. பக்தர்கள் தரிசனத்திற்காக நிற்கும் இடம் (மகா மண்டபம்)

4. சண்டிகேஸ்வரர் சன்னிதி

5. அம்பாள் மூலஸ்தானம்

6. கலை நிகழ்ச்சி நடத்தும் இடம் (நிருத்த மண்டபம்)

7. பள்ளியறை

8. நடராஜர் சன்னிதி

9. கொடிமரம் இருக்கும் இடம் (துவஸதம்ப மண்டபம்)

10. இறைவனுக்கான நைவேத்தியம் தயாரிக்கும் இடம் (மடப்பள்ளி)

11. நால்வர் சன்னிதி (சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்)

12.பசு பராமரிக்கும் இடம் (கோசாலை)

13. அம்பாள் சன்னிதி

14. சந்தான குரவர் சன்னிதி

15. விழாக்கால சப்பரம் வைக்கும் இடம் (வாகன சாலை)

16. விநாயகர் சன்னிதி

17. முருகன் சன்னிதி

18. வசந்த மண்டபம்

19. பைரவர் சன்னிதி

20. சூரியன் சன்னிதி

21. சந்திரன் சன்னிதி

22. ராஜகோபுரம் அல்லது நுழைவு வாசல்

23. அபிஷேகத் தீர்த்தக் கிணறு அல்லது தெப்பக் குளம்

24. நைவேத்தியத்திற்காக நீர் எடுக்கும் இடம்

(மடப்பள்ளிக் கிணறு)

25. தட்சிணாமூர்த்தி சன்னிதி

இவைத் தவிர பெரிய ஆலயங்களில், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனர் சன்னிதி, யாக சாலை, ஆகம நூலகம் போன்றவையும் இடம்பெற்றிருக்கும்.
Tags:    

Similar News