வழிபாடு
சேலம் கோட்டை பெருமாள்

சேலம் கோட்டை பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது

Published On 2022-05-17 07:48 GMT   |   Update On 2022-05-17 07:48 GMT
சேலம் கோட்டை பெருமாள் கோவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு வைகாசி விசாக தேர்த்திருவிழா அடுத்த மாதம் (ஜூன்) 13-ந் தேதி நடைபெறுகிறது.
சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு வைகாசி விசாக தேர்த்திருவிழா அடுத்த மாதம் (ஜூன்) 13-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ராஜகணபதி கோவில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெருமாள் கோவில் தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.

முன்னதாக காலையில் கோட்டை பெருமாள் , தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதையடுத்து காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் பெருமாள் கோவில் தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதனை சுதர்சன பட்டாச்சாரியார் முன்னின்று நடத்தினார். இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கோட்டை பெருமாள் கோவில் செயல் அலுவலர் அமுதசுரபி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News