வழிபாடு
அகத்தியருக்கு, சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி

அகத்தியருக்கு, சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி

Published On 2022-05-09 10:31 IST   |   Update On 2022-05-09 10:31:00 IST
அகத்தியருக்கு, சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திண்டுக்கல் சிவபுர ஆதீனம் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தந்த இடம். வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த திருக்கதவை அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு.

இந்த கோவிலில் உள்ள சிவன்-பார்வதிக்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சிறப்பு அபிஷேகங்கள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதை தொடர்ந்து  நேற்று திருக்கல்யாணம் தரிசனம் நடந்தது. இதை தொடர்ந்து அகத்தியருக்கு, சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திண்டுக்கல் சிவபுர ஆதீனம் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

மேலும் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்திநாதர் பண்டார சந்நிதி, கோவில் நிர்வாக அதிகாரி ஜெயச்சந்திரன் மற்றும் உபயதாரர்கள், திரளான பக்தர்கள்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News