வழிபாடு
பழனி முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழா நாளை தொடக்கம்
பழனி முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழா நாளை தொடங்குகிறது. இதை முன்னிட்டு கிரிவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் கோடை காலத்தில் அக்னி நட்சத்திர கழு திருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்கள், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்கள் என 14 நாட்கள் அக்னிநட்சத்திர கழு திருவிழாவாக கொண்டாடப்படும். இந்த 14 நாட்களில் பழனி பகுதியை சேர்ந்த பக்தர்கள் காலை, மாலை வேளையில் பழனி கிரிவீதிகளில் வலம் வந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.
இவ்வாறு கிரிவலம் வரும்போது சுத்தமான காற்று வீசும் என்றும், இதனால் உடல் புத்துணர்ச்சி பெறும் என்பதும் நம்பிக்கை. இந்த ஆண்டு அக்னி நட்சத்திர கழு திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
இதையடுத்து பழனி கிரிவீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று நடைபெற்றது. கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் தலைமையிலான பணியாளர்கள், ஊழியர்கள் கிரிவீதிகளில் பாதையை ஆக்கிரமித்து கடைக்காரர்கள் வைத்திருந்த பொருட்களை அகற்றி வேனில் ஏற்றினர். மேலும் பக்தர்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இவ்வாறு கிரிவலம் வரும்போது சுத்தமான காற்று வீசும் என்றும், இதனால் உடல் புத்துணர்ச்சி பெறும் என்பதும் நம்பிக்கை. இந்த ஆண்டு அக்னி நட்சத்திர கழு திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
இதையடுத்து பழனி கிரிவீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று நடைபெற்றது. கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் தலைமையிலான பணியாளர்கள், ஊழியர்கள் கிரிவீதிகளில் பாதையை ஆக்கிரமித்து கடைக்காரர்கள் வைத்திருந்த பொருட்களை அகற்றி வேனில் ஏற்றினர். மேலும் பக்தர்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.