வழிபாடு
அருணாசலேஸ்வரர் மீது பொம்மை பூ போடும் நிகழ்ச்சி

அருணாசலேஸ்வரர் மீது பொம்மை பூ போடும் நிகழ்ச்சி

Published On 2022-05-06 09:13 IST   |   Update On 2022-05-06 09:13:00 IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி மீது மங்கள வாத்தியங்கள் முழங்க பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த விழா 10 நாட்கள் நடைபெறும்.

முதல் நாள் விழாவான நேற்று இரவு கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள மகிழ மரம் அருகில் பன்னீர் மண்டபத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

அப்போது சாமி மீது மங்கள வாத்தியங்கள் முழங்க பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News