வழிபாடு
பழனி முருகன் கோவிலில்தை மாத கார்த்திகை உற்சவம்
பழனி முருகன் கோவிலில் தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். இதன் பின்னர் தங்கரத புறப்பாடு நடந்தது.
பழனி முருகன் கோவிலில், தை மாத கார்த்திகை உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சன்னியாசி அலங்காரமும், காலை 8 மணிக்கு சிறுகால சந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் நடந்தது. 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகம் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.தை மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி மலைக்கோவிலில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டளை தரிசனம், கால பூஜை தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிகாலை முதலே பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வருகை தந்தனர். மேலும் அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதற்கிடையே 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் சின்னக்குமாரர் தங்கரதத்தில் எழுந்தருளினார். அதன்பிறகு தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 70 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி கலந்து கொண்டனர். பின்னர் 9 மணிக்கு ராக்கால பூஜையில் சுவாமிக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
இதற்கிடையே 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் சின்னக்குமாரர் தங்கரதத்தில் எழுந்தருளினார். அதன்பிறகு தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 70 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி கலந்து கொண்டனர். பின்னர் 9 மணிக்கு ராக்கால பூஜையில் சுவாமிக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.