வழிபாடு
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் மாசி திருவிழாவில் சிறிய தேரில் அம்மன் பவனி

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் மாசி திருவிழாவில் சிறிய தேரில் அம்மன் பவனி

Published On 2022-02-05 09:16 IST   |   Update On 2022-02-05 09:16:00 IST
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான வெயிலுகந்தம்மன் கோவில் மாசி திருவிழாவின் 10- நாளில் தேரோட்டத்துக்கு பதிலாக, அம்மன் சிறிய தேரில் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் பவனி வந்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான வெயிலுகந்தம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, விழா நாட்களில் தினமும் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்திற்குள் உலா வந்தார்.

திருவிழாவின் 10-ம் நாளான நேற்று காலை தேரோட்டத்துக்கு பதிலாக, அம்மன் சிறிய தேரில் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் பவனி வந்தார்.

விழாவில் கோவில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News