வழிபாடு
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில்

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா 20-ந்தேதி தொடங்குகிறது

Published On 2022-02-04 14:36 IST   |   Update On 2022-02-04 14:36:00 IST
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருகிற 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருகிற 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. 19-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

பிரம்மோற்சவ விழா வாகனச் சேவை விவரம் வருமாறு:-

20-ந்தேதி மீன லக்னத்தில் கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகனம், 21-ந்தேதி காலை சிறிய சேஷ வாகனம், இரவு ஹம்ச வாகனம், 22-ந்தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பந்தல் வாகனம், 23-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகனம், 24-ந்தேதி காலை பல்லக்கு உற்சவம் (மோகினி அவதாரம்), இரவு கருட வாகனம், 25-ந்தேதி காலை அனுமந்த வாகனம், மாலை தங்கத்தேரோட்டம், இரவு யானை வாகனம், 26-ந்ேததி காலை சூரிய பிரபா வாகனம், இரவு சந்திர பிரபா வாகனம், 27-ந்தேதி மரத்தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகனம், இரவு குதிரை வாகனம், 28-ந்தேதி சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம். இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

வாகனச் சேவை தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9 வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. மேற்கண்ட வாகனங்களில் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், ஸ்ரீதேவி, பூதேவியர்களுடன் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்கள்.

முன்னதாக 15-ந்தேதி காலை 6 மணியில் இருந்து காலை 10 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

Similar News