வழிபாடு
காளத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடக்கிறது
புதுவை காளத்தீஸ்வரர் கோவிலில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 6-ம் கால யாக பூஜை நடத்தப்பட்டு கோவில் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
புதுவை மிஷன் வீதியில் பிரசித்தி பெற்ற காளத்தீஸ்வரர் கோவில் (செட்டிக்கோவில்) உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து வந்த நிலையில் வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று மாலை முதல் கால யாக பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இன்றும், நாளையும் (வெள்ளி, சனிக்கிழமை) 5 கால பூஜைகள் நடக்கின்றன. அதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 6-ம் கால யாக பூஜை நடத்தப்பட்டு கோவில் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் மற்றும் திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் மற்றும் திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.