வழிபாடு
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 8-ந்தேதி ரத சப்தமி விழா
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் ரத சப்தமி விழாவில் கோவிலில் கல்யாண உற்சவம், வி.ஐ.பி. பிரேக் தரிசனம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சூரிய ஜெயந்தியையொட்டி வருகிற 8-ந்தேதி ரதசப்தமி விழா நடக்கிறது. கோவிலில் வாகன மண்டபத்தில் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக அனைத்து வாகனச் சேவைகளும் நடக்கிறது.
அதன்படி 8-ந்தேதி காலை 7 மணியில் இருந்து காலை 7.30 மணி வரை சூரிய பிரபை வாகனச் சேவை, காலை 8 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை ஹம்ச வாகனச் சேவை, காலை 9 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை குதிரை வாகனச் சேவை, காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை கருட வாகனச்சேவை, காலை 10 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை சிறிய சேஷ வாகனச் சேவை.
மாலை 3 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் சக்கர ஸ்நானம், மாலை 6 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை சந்திரபிரபை வாகனச் சேவை, இரவு 7.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை யானை வாகனச் சேவை நடக்கிறது.
ரத சப்தமி விழாவில் கோவிலில் கல்யாண உற்சவம், வி.ஐ.பி. பிரேக் தரிசனம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது எனக் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி 8-ந்தேதி காலை 7 மணியில் இருந்து காலை 7.30 மணி வரை சூரிய பிரபை வாகனச் சேவை, காலை 8 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை ஹம்ச வாகனச் சேவை, காலை 9 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை குதிரை வாகனச் சேவை, காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை கருட வாகனச்சேவை, காலை 10 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை சிறிய சேஷ வாகனச் சேவை.
மாலை 3 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் சக்கர ஸ்நானம், மாலை 6 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை சந்திரபிரபை வாகனச் சேவை, இரவு 7.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை யானை வாகனச் சேவை நடக்கிறது.
ரத சப்தமி விழாவில் கோவிலில் கல்யாண உற்சவம், வி.ஐ.பி. பிரேக் தரிசனம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது எனக் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.