வழிபாடு
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

Published On 2022-02-02 10:24 IST   |   Update On 2022-02-02 10:24:00 IST
ஸ்ரீகாளஹஸ்தி உற்சவ மூர்த்திகளான ஞானபிரசுனாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வருக்கு மஞ்சள், சந்தனம், விபூதி, இளநீர், பால், தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. உற்சவ மூர்த்திகளான ஞானபிரசுனாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரரை கோவில் அருகில் உள்ள பரத்வாஜ் தீர்த்தத்திற்கு மேள தாளங்கள், மங்கல வாத்தியங்களுடன் பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லபட்டனர். அங்கு சிவன் கோவில் அபிஷேக குருக்களால் மஞ்சள், சந்தனம், விபூதி, இளநீர், பால், தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்தனர்.

தை அமாவாசை உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி. ராஜு, துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ரெட்டி மற்றும் அதிகாரிகள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News